பிடித்தவை

  • புத்தகங்கள்
  • பயணம்
  • குழந்தைகள்

Wednesday, April 28, 2010

சுமைதாங்கி


கிராமங்களில் சாலை ஓரங்களில் கருங்கல்லால் ஆன சுமைதாங்கி எனப்படும் மேடைகளை பார்த்திருப்பீர்கள்.

வாகன வசதி இல்லாத அந்நாட்களில் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நடந்து செல்லும்போது தங்கள் தலை சுமையை இறக்கி வைக்க பயன்படுத்தபட்டவைதான் இவை.

மருத்துவ வசதி இல்லாத அந்நாட்களில் கருவுற்ற பெண்ணொருத்தி குழந்தை பெற்றுக் கொள்ளும்முன் இறந்துவிட்டால் அவளுக்காக சாலை ஓரங்களில் சுமைதாங்கிகல் அமைப்பது வழக்கமாக இருந்தது.

இதில் மக்கள் தங்கள் சுமைகளை இறக்கி வைக்கும்போது தங்கள் உடல் வலி குறைந்து களைப்பு நீங்கும்போது, வயிற்றுசுமையுடன் இறந்த கர்ப்பிணி பெண்ணின் துன்பம் நீங்கி அவள் ஆத்மா சாந்தி அடைவதாக ஒரு நம்பிக்கை.

நமது முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உண்டு என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

No comments:

Post a Comment