
கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் எப்பொழுது வேலினை பார்த்தாலும் ஒரு அமைதி மனதில் உண்டாகிறது.
வேலினை பற்றி சொல்லவேண்டுமானால் அது உருவாகிய கதை அனைவரும் அறிந்திருப்பீர்கள், ஆனால் நான் அதை பற்றிய விளக்கத்தை ஒரு திரைப்படத்தில் (சாரதா) பார்த்த நினைவு.
அறிவு என்பது எந்த ஒரு விஷயம் ஆனாலும் முதலில் ஆழ்ந்தும், பின் அதனை பற்றிய சாதக மற்றும் பாதகமான விஷயங்களை அறிந்து குறுகிய நோக்கம் இல்லாமல் அகன்று யோசித்தும் சிறந்த முறையில் முடிவெடுக்க இறுதியில் கூர்மையாகி இருக்க வேண்டும். எனவே வேல் என்பது மேற்சொன்ன விதத்தில் சிறந்த அறிவின் வெளிப்பாடாகத் திகழ்கின்றது.
No comments:
Post a Comment