ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்
ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
ஒரு மேகத்தை போல் எந்தன் தேகத்தை மாற்றிவைத்தாய்.
இறகைப் போலொரு வேகத்தில்(2)
வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்
நிலவைப்போல் உனை தூரத்தில்(2)
பார்க்கின்ற போதெல்லாம் துள்ளுகின்றேன்
நீ எனது உயிராக நான் உனது உயிராக
ஓர் உறவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்
நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி
நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும்
உயிரே நீ பார்த்தாலே உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்
உன்னால் அடி உன்னாலே
உள்ளுக்குள் என்னென்னவோ ஆகும்
படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ரஞ்சித்
No comments:
Post a Comment